Wednesday, September 03, 2014
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிகெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் இன்று மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீ்ல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியைச் சேர்ந்த குக்- ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் முறையே 9, 6 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்தில் வீச்சில் வீழ்ந்தனர்.
3-வது வீரராக களம் இறங்கிய பேலன்ஸ் 7 ரன்னில் முகமது சமி பந்தில் வீச்சில் பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 23 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் அதிரடியாக ரன் குவிக்க இயலவில்லை. இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 28.2 ஓவரில் 103 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். ரூட் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த மொயீன் அலியைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 206 ரன்கள் எடுத்து சுருண்டது. மொயீன் அலி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டும், புவனேஸ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment