Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர் தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் சங் கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுபானங்களை விற்கக்கூடாது
நீலகிரி மாவட்டத்தில் கீழ்குந்தா பேரூராட்சி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங் களில் வருகிற 18–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது. இதனால் இன்று (செவ் வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 18–ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண் ணிக்கை நடைபெறும் 22–ந் தேதியும் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு எண் 1 மற்றும் 7, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3–க்குட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003–ன் படி மஞ்சூர் பஜார், அய்யங்கொல்லி, உப்பட்டி மற்றும் சேரம்பாடி பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும் என பொதுமக்களுக்கு தெரிவிக் கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
மேற்குறிப்பிட்ட தினங்களில் எந்தவித மதுபானங்களும் விற் பனை செய்யக் கூடாது. அன் றைய தினங்களில் கட்டாயமாக டாஸ்மாக் மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படு கிறது. இந்த உத்தரவை மீறி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

0 comments: