Sunday, September 21, 2014
திருப்பூர் மாநகராட்சி அனைத்து ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் தங்கராஜ் (எ) மாரிமுத்து, ஆலோசனை தலைவர் அய்யாக்குட்டி, செயலாளர் இப்பராஹிம், பொருளாளர் ராஜி ஆகியோர் கூறியதாவது:–
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் அனைவரும் திருப்பூர் மாநகராட்சி பழைய சந்தைப்பேட்டை பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள ஆடுவதைக் கூடத்தில் ஆடுவதை செய்து வருகிறோம்.
ஆனால் 4 மண்டலத்திற்கும் சேர்த்து ஒரு ஆடுவதைக் கூடம் மட்டும் இருப்பதால் அனைவரும் ஆடுவதை செய்வது என்பது சிரமமாக உள்ளது. போக்குவரத்து தூரம், கால தாமதம் ஆகிய காரணங்களால் அனைவரும் ஒரே இடத்தில் ஆடுவதை செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை நான்கு மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் அமைத்து தர வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே 4 மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் கட்டித்தர வேண்டும்.
வடக்கு பகுதி அனுப்பர் பாளையம், பாண்டியன் நகர், புதுப்பஸ்ஸ்டேண்ட், மற்றும் நல்லூர், செட்டிபாளையம், கோயில் வழி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கடைக்காரர்களுக்கு தூரம் மற்றும் போக்குவரத்து சிரமம் காலதாமதம் ஏற்படுவதால் எங்களது வியாபரத்தை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment