Sunday, September 21, 2014
திருப்பூர் மாநகராட்சி அனைத்து ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நலச் சங்க தலைவர் தங்கராஜ் (எ) மாரிமுத்து, ஆலோசனை தலைவர் அய்யாக்குட்டி, செயலாளர் இப்பராஹிம், பொருளாளர் ராஜி ஆகியோர் கூறியதாவது:–
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் அனைவரும் திருப்பூர் மாநகராட்சி பழைய சந்தைப்பேட்டை பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள ஆடுவதைக் கூடத்தில் ஆடுவதை செய்து வருகிறோம்.
ஆனால் 4 மண்டலத்திற்கும் சேர்த்து ஒரு ஆடுவதைக் கூடம் மட்டும் இருப்பதால் அனைவரும் ஆடுவதை செய்வது என்பது சிரமமாக உள்ளது. போக்குவரத்து தூரம், கால தாமதம் ஆகிய காரணங்களால் அனைவரும் ஒரே இடத்தில் ஆடுவதை செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை நான்கு மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் அமைத்து தர வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே 4 மண்டலங்களிலும் ஆடுவதைக் கூடம் கட்டித்தர வேண்டும்.
வடக்கு பகுதி அனுப்பர் பாளையம், பாண்டியன் நகர், புதுப்பஸ்ஸ்டேண்ட், மற்றும் நல்லூர், செட்டிபாளையம், கோயில் வழி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கடைக்காரர்களுக்கு தூரம் மற்றும் போக்குவரத்து சிரமம் காலதாமதம் ஏற்படுவதால் எங்களது வியாபரத்தை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment