Sunday, September 21, 2014
மதுக்கடை பார்களை மூட உத்தரவிட்ட கேரள அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அந்த மாநிலத்தில் செயல்பட்டு வந்த 418 மதுக்கடை பார்களை மூட சமீபத்தில், உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுக்கடை பார் உரிமையாளர்கள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.டி.சங்கரன், பி.டி.ராஜன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கேரள அரசு புதிய மதுவிலக்கு கொள்கையை அறிவித்துள்ள நிலையில், இந்த ரிட் வழக்குகள் வீணானவை எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.
மேலும், புதிய மதுவிலக்கு கொள்கையை எதிர்த்து, ஒற்றை நீதிபதியை வழக்குதாரர்கள் நாடலாம் என நீதிபதிகள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
0 comments:
Post a Comment