Sunday, September 21, 2014
ஆவின் பால் கலப்பட முறைகேட்டால் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆவின் கூட்டுறவு நிலையங்களில் சேகரிக்கப்படும் பால், சென்னைக்கு கொண்டு வரப்படும் வழியில் திருடப்பட்டு, எடுக்கப்படும் பாலுக்கு நிகரான அளவு தண்ணீர் அதில் கலக்கப்படுவதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.
இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரரும், அ.தி.மு.க. பிரமுகருமான வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தினமும் சுமார் 1,500 லிட்டர் பால் திருடப்பட்டதாகவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் திருட்டு நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி, ஆவின் நிறுவனத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் வைத்தியநாதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும்போது இதுகுறித்த முழுமையான தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment