Thursday, September 25, 2014
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீட்டைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப், 26 ஆம் தேதி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 25 ஆம் தேதியே பிரதமர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். ஜெர்மனி தலைநகர் பிராங்பர்ட் நகரில் ஓய்வு எடுத்து விட்டு பயணத்தைத் தொடருவார். பின்னர், 26 ஆம் தேதி நியூயார்க்கில் தரை இறங்குவார். அன்றிரவு நியூயார்க்கில் தங்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து 27 ஆம் தேதி மோடியின் 6 நாள் அமெரிக்க சுற்றுபயணம் தொடங்குகிறது. இதில் நியூயார்க்கில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரம் பகுதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்துவார். பின்னர், அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசுவார். பேச்சு வார்த்தையில் அமெரிக்கா – இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின் உற்பத்தி திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ. 7 கோடி செலவில் உபகரணங்கள் நிறுவப்பட வேண்டும். ஆகையால் 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும். இத்திட்டத்தை அமெரிக்கா உதவியுடன் செயல்படுத்த பிரதமர் மோடி மிகவும் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment