Saturday, September 13, 2014
நெல்லை,செப்.13–
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு சாட்டுப்பத்து வழியாக பாபநாசம் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதனால் மேலும் பயணிகள் பீதியடைந்தனர். எனினும் அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி பஸ்சை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
டிரைவரின் இந்த நடவடிக்கையால் பஸ்சில் இருந்த 50–க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறுகையில், சமீபகாலமாக அரசு பஸ்களில் பயணம் செய்தால் எங்காவது பழுதாகி நின்று விடுகிறது. இதுபோன்று டயர்கள் வெடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே தினமும் பஸ்கள் புறப்படும் முன்பு அதில் உள்ள பழுதுகளை நீக்கி விபத்தில்லாமல் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment