Saturday, September 13, 2014
நெல்லை,செப்.13–
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு சாட்டுப்பத்து வழியாக பாபநாசம் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதனால் மேலும் பயணிகள் பீதியடைந்தனர். எனினும் அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி பஸ்சை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
டிரைவரின் இந்த நடவடிக்கையால் பஸ்சில் இருந்த 50–க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறுகையில், சமீபகாலமாக அரசு பஸ்களில் பயணம் செய்தால் எங்காவது பழுதாகி நின்று விடுகிறது. இதுபோன்று டயர்கள் வெடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே தினமும் பஸ்கள் புறப்படும் முன்பு அதில் உள்ள பழுதுகளை நீக்கி விபத்தில்லாமல் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment