Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
நெல்லை,செப்.13–
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு சாட்டுப்பத்து வழியாக பாபநாசம் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். டயர் வெடித்ததால் பஸ் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதனால் மேலும் பயணிகள் பீதியடைந்தனர். எனினும் அரசு பஸ் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி பஸ்சை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
டிரைவரின் இந்த நடவடிக்கையால் பஸ்சில் இருந்த 50–க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறுகையில், சமீபகாலமாக அரசு பஸ்களில் பயணம் செய்தால் எங்காவது பழுதாகி நின்று விடுகிறது. இதுபோன்று டயர்கள் வெடிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே தினமும் பஸ்கள் புறப்படும் முன்பு அதில் உள்ள பழுதுகளை நீக்கி விபத்தில்லாமல் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.

0 comments: