Saturday, September 13, 2014
முத்தூர், செப்.13–
முத்தூர் அருகே வீரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). இவர் தனது தோட்டம் அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஈஸ்வரன், தனது ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
அப்போது நள்ளிரவில் மர்ம கும்பல் புகுந்து பட்டியில் இருந்த 41 ஆடுகளை திருடி சென்றனர்.
அதேபோல் ஈஸ்ரவனின் அண்ணனின் ஆடுகள் பட்டியும் அருகே உள்ளது. இந்த பட்டியிலும் மர்ம கும்பல் புகுந்து அங்கிருந்த 19 ஆடுகளை திருடி சென்றுவிட்டனர்.
காலையில் ஈஸ்வரன் வந்து பார்த்த போது பட்டியில் ஆடுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
திருடு போன 60 ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment