Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில், உணவு வழங்கல் துறை தனிதாசில்தார் (கூ.பொறுப்பு) தயானந்தன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் வீ.மணிமுத்து, சந்திரசேகரன், தருமன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராகல்பாவி பிரிவி அருகே ரோட்டோரத்தில் 6 கேன்கள் கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 160 லிட்டர் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மண்எண்ணெய் கேன்களை கைப்பற்றி கொண்டு வந்தனர். மேலும் அந்த மண்எண்ணெய் கேன்களை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: