Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
நள்ளிரவு வரை பெய்த இந்த பலத்த மழையால் இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், பாளையக்காடு, 2–வது ரெயில்வேகேட் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் பாலம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments: