Monday, September 29, 2014
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆ.கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி வரவேற்றார். விழாவில் முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் கி.குமாரசாமி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாணவர்களின் கல்வி பயணத்தில் பட்டமளிப்பு விழா என்பது முக்கிய அடையாளமாக அங்கம் வகிக்கிறது. பட்டமளிப்பு என்பது முறைசார் கல்வியின் முடிவாகவும், தொழிற்பயணத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. உயர் கல்விக்கும் பட்டமே முதல் படியாகும். பட்டம் பெறல் எதிர்காலத்தில் உங்கள் செயல்கள் எதை சார்ந்து இருக்க வேண்டும் என்பதனையும், நீங்கள் ஏற்க வேண்டிய செயல்கள் எவை என்று உங்களுக்கு உணர்த்துவதாக அமைகிறது. எவ்வகை எதிர்காலம் நமக்கு முன்னாள் இருக்கிறது என்பதை நாம் அறிய இயலாது.
ஆனால் நம் முன் இருக்கும் அனைத்து சவால்களையும், சிக்கல்களையும் தீர நெஞ்சத்துடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் முயற்சியால் அனைத்து செயல்களும் வெற்றியாகட்டும். விண் கலங்களை விண்ணில் செலுத்தும் அளவிற்கு ஏற்றமிகு எதிர்காலத்தை தன்கையில் கொண்டுள்ள இந்தியாவில் வாழும் நீங்கள் அதன் ஏற்றத்தை மட்டும் எண்ணாமல் இந்தியாவில் நிலவும் ஏழ்மை, ஊட்டக்குறைபாடு, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றை நீக்கிட மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் ஆராய வேண்டும். கல்வி என்பது நாகரீகத்தையும், காலசாரத்தையும் கடந்து தனிமனித பண்புகளையும், அறிவினையும் மேம்படுத்தும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
537
விழாவையொட்டி பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் 537 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராமலிங்கம், வ.கிருஷ்ணன், கு.பரந்தமான், ம.சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment