Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கும் வகையிலும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்லடம் கல்லம்பாளைத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஏ.கே.ராமமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மகளிரணியினர் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ராதேவி, நகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி, நகர அவைத்தலைவர் ராயர்பாளையம் தங்கவேல் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: