Monday, September 29, 2014
காங்கயத்தில் நேற்று 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதாலும், பஸ்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் காங்கயத்தில் அ.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தியும் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கயத்தில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்
நேற்று முன்தினம் இரவு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அனைவரும் வேலை முடிந்து அவரவர்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கடைகளை அடைக்கச்சொல்லி கூறியதால், காங்கயத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் போலீசார் கடைகளை திறக்க சொல்லி கேட்டுக்கொண்டதால் காலை 10 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டது. இதை அறிந்து சிலர் மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி கூறியதால் மாலை வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதேபோல பஸ்கள் காலை 11 மணிக்கு மேல் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. சிறிது நேரமே பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து சென்றன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.
தொடர்ந்து 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment