Monday, September 29, 2014
காங்கயத்தில் நேற்று 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதாலும், பஸ்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் காங்கயத்தில் அ.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தியும் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கயத்தில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்
நேற்று முன்தினம் இரவு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அனைவரும் வேலை முடிந்து அவரவர்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கடைகளை அடைக்கச்சொல்லி கூறியதால், காங்கயத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் போலீசார் கடைகளை திறக்க சொல்லி கேட்டுக்கொண்டதால் காலை 10 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டது. இதை அறிந்து சிலர் மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி கூறியதால் மாலை வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதேபோல பஸ்கள் காலை 11 மணிக்கு மேல் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. சிறிது நேரமே பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து சென்றன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.
தொடர்ந்து 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment