Monday, September 29, 2014
திருப்பூரை சேர்ந்தவன் 8 வயது சிறுவன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 3–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த சிறுவனை தனது ஆட்டோவுக்கு அழைத்து சென்றார். அங்கு, அந்த சிறுவனை ஆட்டோவின் பின்புற இருக்கையில் உட்கார வைத்து, செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
அந்த வழியாக வந்தவர்கள், ஆட்டோ டிரைவரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே அவர் ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அந்த சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த ஆட்டோ திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதை திண்டுக்கல் ராஜாக்காபட்டியை சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், ரவிசந்திரனின் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் ரவிசந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி ராமசந்திரன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment