Friday, September 26, 2014
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட் டும். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். குடும்பத்துடன் வருபவர்கள் தவிர கள்ளக்காதல் ஜோடிகளின் புகலிடமாகவும் இது திகழ்கிறது. மாலை 5 மணிக்கு மேல் அருவிக்கு செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வனத்துறையினர் 2 பேர் கீழே இறங்கி வந்தனர். அப்போது அகஸ்தியர் அருவிக்கு செல்லும் மெயின் சாலையில் நீண்ட நேரமாக ஒரு பைக் நிற்பதை கவனித்தனர். அதன் அருகில் யாரும் இல்லாததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. யாராவது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பைக்கை இங்கு விட்டுச் சென்றனரா என்ற பதைபதைப்புடன் அவர்கள் பழைய பாதை படிக்கட்டு வழியாக இறங்கிச் சென்று தேடினர்.
அப்போது ஒரு மறைவிடத்தி லிருந்து �சிணுங்கல்� சத்தம் கேட்கவே அதிர்ச்சியுடன் சென்று பார்த்தனர். அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்தபடி சிரித்து பேசிக்கொண்டிருந் தார். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் திடுக்கிட்டு எழுந்து வந்தனர். அவர்களிடம் வனத்துறை ஊழியர்கள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
உடனே அந்த நபர், தான் போலீஸ்காரர் என்றும் விருதுநகரில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியதோடு அதற்கான அடையாள அட்டையையும் எடுத்து காண்பித்தார். இதையடுத்து அந்த ஜோடியை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போலீஸ்காரருடன் வந்த பெண் கள்ளக்காதலியாக இருக்கக்கூடும் என்றும் விருதுநகரில் இருந்து அவரை பைக்கில் அழைத்து வந்திருக்ககூடும் என்றும் தெரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment