Thursday, September 04, 2014
சென்னை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஓட்டேரி பனந்தோப்பு ரெயில்வே காலனி மைதானம் அருகே உள்ள போலீஸ் பூத்தில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை அந்த பக்கமாக சென்றவர்கள் பார்த்து சென்றனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் பூத்தில் இருந்த இருவரும் மாயமானார்கள். ஆனால் போலீஸ் பூத்தில் மின் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீஸ் பூத்துக்கு அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது பூத்தின் உள்ளே அந்த பெண்ணுடன் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீஸ் பூத்தை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் சுதாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 

 
 
 
0 comments:
Post a Comment