Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், : அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை ஆரம்ப விழா நேற்று நடைபெற்றது.
பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்கத்தினரின் சார்பில், நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கருடகம்பம் முன்புறம் ரிஷப கொடியேற்றி சிவகவி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை கோயில் வளாகத்தில் 108 சிவனடியார்கள் ஒன்றிணைந்து ஆன்மார்த்த சிவபூஜை செய்தனர். இதில், சிவபுராணம், பஞ்ச புராணம், தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை இன்னிசையுடன் பாடி கூட்டு வழிபாடு நடத்தினர். குளித்தலை ராமலிங்கம் திருமுறை இன்னிசையுடன் அவிநாசி ஸ்தலபுராணம் குறித்து சொற்பொழிவாற்றினார்.
இதில், அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், தேனி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, பெங்களூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்க பொறுப்பாளர்கள் திருப்பூர் சிவபாபு, திருவண்ணாமலை சிவகோவர்த் தன், திருச்சி சிவபார்த்தசாரதி மற்றும் அவிநாசி சுந்தரர் வார வழிபாட்டு குழுவினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் வார திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை சொற்பொழிவு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment