Tuesday, September 09, 2014
அனுப்பர்பாளையம், : அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை ஆரம்ப விழா நேற்று நடைபெற்றது.
பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்கத்தினரின் சார்பில், நடைபெற்ற இவ்விழாவின் துவக்கமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கருடகம்பம் முன்புறம் ரிஷப கொடியேற்றி சிவகவி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை கோயில் வளாகத்தில் 108 சிவனடியார்கள் ஒன்றிணைந்து ஆன்மார்த்த சிவபூஜை செய்தனர். இதில், சிவபுராணம், பஞ்ச புராணம், தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை இன்னிசையுடன் பாடி கூட்டு வழிபாடு நடத்தினர். குளித்தலை ராமலிங்கம் திருமுறை இன்னிசையுடன் அவிநாசி ஸ்தலபுராணம் குறித்து சொற்பொழிவாற்றினார்.
இதில், அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், தேனி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, பெங்களூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை பதஞ்சலி வியாக்ரபாத சன்மார்க்க சங்க பொறுப்பாளர்கள் திருப்பூர் சிவபாபு, திருவண்ணாமலை சிவகோவர்த் தன், திருச்சி சிவபார்த்தசாரதி மற்றும் அவிநாசி சுந்தரர் வார வழிபாட்டு குழுவினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
மேலும் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் வார திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அவிநாசி ஸ்தலபுராண விரிவுரை சொற்பொழிவு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment