Tuesday, September 09, 2014
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து, இஸ்லாமிய தேசம் என்று
அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது
என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல இடங்களை பிடித்து வைத்துள்ளனர்.
அந்த இடங்களை மீட்பதற்காக அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள்
பிடியிலிருந்த அமெரிக்க செய்தியாளர் ஒருவரை ஏற்கனவே தலையை துண்டித்து கொலை
செய்தனர்.
தற்போது மேலும் ஒரு அமெரிக்க செய்தியாளரை தலையை துண்டித்து கொலை
செய்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பினார்கள். இது
அமெரிக்காவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருப்பதாவது:–
அமெரிக்க செய்தியாளரின் தலையை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டதன் மூலம்
தீவிரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது.
அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த மோசமான செயலை நாங்கள்
ஒருபோதும் மறக்கமாட்டோம். இதற்கு நிச்சயமாக உரிய பதிலடி கொடுக்கப்படும்.
தீவிரவாதிகளின் செயலை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை. இஸ்லாமிய தேசம்
என்று அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி
பூண்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அவர்களை
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற உறுதி இப்போது மீண்டும் எழுந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையை உருவாக்குவோம்.
துணிச்சல் மிகுந்த அந்த இரு செய்தியாளர்களின் குடும்பத்துக்காக நாம் இறைவனை
பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment