Tuesday, September 09, 2014
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து, இஸ்லாமிய தேசம் என்று
அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது
என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல இடங்களை பிடித்து வைத்துள்ளனர்.
அந்த இடங்களை மீட்பதற்காக அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள்
பிடியிலிருந்த அமெரிக்க செய்தியாளர் ஒருவரை ஏற்கனவே தலையை துண்டித்து கொலை
செய்தனர்.
தற்போது மேலும் ஒரு அமெரிக்க செய்தியாளரை தலையை துண்டித்து கொலை
செய்துள்ளனர். அதன் வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பினார்கள். இது
அமெரிக்காவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருப்பதாவது:–
அமெரிக்க செய்தியாளரின் தலையை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டதன் மூலம்
தீவிரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது.
அமெரிக்கர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த மோசமான செயலை நாங்கள்
ஒருபோதும் மறக்கமாட்டோம். இதற்கு நிச்சயமாக உரிய பதிலடி கொடுக்கப்படும்.
தீவிரவாதிகளின் செயலை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை. இஸ்லாமிய தேசம்
என்று அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்க உறுதி
பூண்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அவர்களை
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற உறுதி இப்போது மீண்டும் எழுந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லாத நிலையை உருவாக்குவோம்.
துணிச்சல் மிகுந்த அந்த இரு செய்தியாளர்களின் குடும்பத்துக்காக நாம் இறைவனை
பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment