Tuesday, September 09, 2014
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டு இரண்டு பெரிய விமான விபத்துக்களை
சந்தித்தது. இவ்விபத்தால் 500-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை பெரும் சரிவை
நோக்கிச் சென்றது
இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய யுக்திகளைக் கையாண்டது
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம். கட்டணம் அதிரடியாகக் குறைக்கப்பட்டது. மேலும்
பல சிறப்புச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.
ஆஸ்திரேலிய நிறுவன விற்பனையைப் புதுப்பித்து அந்நாட்டு முகவர்களுக்கு
கமிஷன் தொகையை தாராளமாகத் தந்தது. மேலும் அந்நாட்டுப் பயணிகளுக்குச்
சலுகையாக 'மை அல்டிமேட் பக்கெட் லிஸ்ட்' என்ற தலைப்பில் புதுவிதமான போட்டி
ஒன்றை அரங்கேற்றியது.
இதில் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடம் மற்றும் அதற்கான
காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐபேட்
அல்லது விமான டிக்கெட் பரிசாக வழங்கப்படும் என மலேசியன் ஏர்லைன்ஸ்
நிறுவனம் தெரிவித்தது. இதில் பக்கெட் லிஸ்ட் என்றால் ஒருவர் இறப்புக்கு
முன் பார்க்க அல்லது செய்ய விரும்பும் செயல்களைப் பிரதிபளிப்பதாகும்.
இரண்டு விபத்தை சந்தித்த இந்நிறுவனம் இதுபோன்று போட்டியின் தலைப்பை
வைத்தது பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியது. பின் இந்நிறுவன
இணையத்திலிருந்து அப்பெயர் நீக்கப்பட்டு பயணிகள் செய்ய விரும்பும் செயல் என
மாற்றி அமைக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment