Sunday, September 21, 2014
வால்பாறையை அடுத்துள்ள ஒரு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகம் தங்களது சம்பளத்தில் தொழில்வரிபிடித்தம் செய்ததற்கான ரசீது தரவேண்டும், தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் தோல்வி யாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் வருகிறது.
எனவே இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக கூலி வழங்கவேண்டும். தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தம் செய்தனர்.
பின்னர் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோர் இது குறித்து எஸ்டேட் நிர்வாகத்திடமும் தொழிலாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் எஸ்டேட் நிர்வாகம் எந்த வித உடன்பாட்டிற்கும் வரவில்லை. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மீது எஸ்டேட் அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து எஸ்டேட் மேலாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக வால்பாறை போலீசில் எஸ்டேட் நிர்வாகத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரையும் திரும்ப பெறவேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையையும் கெடுக்காமல் தொழிலும் பாதிக்காமல் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் எஸ்டேட் தோட்ட அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போடும் போராட்டத்தை செய்துவருகின்றனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment