Sunday, September 21, 2014
வால்பாறையை அடுத்துள்ள ஒரு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகம் தங்களது சம்பளத்தில் தொழில்வரிபிடித்தம் செய்ததற்கான ரசீது தரவேண்டும், தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் தோல்வி யாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் வருகிறது.
எனவே இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக கூலி வழங்கவேண்டும். தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தம் செய்தனர்.
பின்னர் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோர் இது குறித்து எஸ்டேட் நிர்வாகத்திடமும் தொழிலாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் எஸ்டேட் நிர்வாகம் எந்த வித உடன்பாட்டிற்கும் வரவில்லை. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மீது எஸ்டேட் அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து எஸ்டேட் மேலாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக வால்பாறை போலீசில் எஸ்டேட் நிர்வாகத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரையும் திரும்ப பெறவேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையையும் கெடுக்காமல் தொழிலும் பாதிக்காமல் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் எஸ்டேட் தோட்ட அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போடும் போராட்டத்தை செய்துவருகின்றனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment