Sunday, September 21, 2014
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்துரையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் அங்குள்ள கெங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி திருப்பூர் மாவட்டம் அவினாசி நாடார் காலனியை சேர்ந்த அமுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இனிய இல்லறத்தின் சாட்சியாக இவர்களுக்கு மலர்விழி (17) என்ற மகளும், தினேஷ்குமார் (16) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்–மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு மூண்டது. அமுதா தனது கணவர் சுப்பிரமணியத்தை அவினாசி போலீஸ் நிலையத்துக்கு மாறுதல் பெற்றுவரும்படி கூறிவிட்டு அவினாசிக்கு வந்து விட்டார்.
மனைவியை பார்க்க சுப்பிரமணி அவினாசி புறப்பட்டு வந்தார். நாடார் காலனி அருகே வந்தபோது அவர் திடீரென ரோட்டில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் போலீஸ் ஏட்டு விஷம் அருந்தியதை கண்டு பிடித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி போலீஸ் ஏட்டு சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
எந்த போலீஸ் நிலையத்துக்கு மாறுதலாகி வர நினைத்தாரோ அதே போலீஸ் நிலையத்தில் அவரின் தற்கொலை வழக்குப்பதிவாகி விசாரணை நடைபெறுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment