Sunday, September 21, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலையில் களிமேடு பகுதியில் தனியார் இடத்தில் வாடகைக் கட்டிடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது. இந்த குறையை போக்க சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பல லட்சம் செலவு செய்து நவீன வசதிகளுடன் டி.எஸ்.பி. அலுவலகம் கட்டப்பட்டது.
ஆனால் இன்னும் திறப்பு விழா செய்யப்படவில்லை. தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு மக்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தின் அருகில் காங்கயம் போலீஸ் நிலையம், மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் காங்கயம் கோர்ட்டு வாளகம், காங்கயம் சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ளது. அதனால் மக்கள் தங்கள் குறைகளை போக்க வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
தனியார் இடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் இயங்குவதால் மாதா மாதம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள புதிய அலுவலகத்தை திறப்பதன் மூலம் மாத வாடகை செலுத்த வேண்டியதில்லை. மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாகும். அரசு விரைவில் முடிவு எடுக்குமா?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


0 comments:
Post a Comment