Sunday, September 21, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலையில் களிமேடு பகுதியில் தனியார் இடத்தில் வாடகைக் கட்டிடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது. இந்த குறையை போக்க சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பல லட்சம் செலவு செய்து நவீன வசதிகளுடன் டி.எஸ்.பி. அலுவலகம் கட்டப்பட்டது.
ஆனால் இன்னும் திறப்பு விழா செய்யப்படவில்லை. தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு மக்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தின் அருகில் காங்கயம் போலீஸ் நிலையம், மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் காங்கயம் கோர்ட்டு வாளகம், காங்கயம் சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ளது. அதனால் மக்கள் தங்கள் குறைகளை போக்க வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
தனியார் இடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் இயங்குவதால் மாதா மாதம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள புதிய அலுவலகத்தை திறப்பதன் மூலம் மாத வாடகை செலுத்த வேண்டியதில்லை. மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாகும். அரசு விரைவில் முடிவு எடுக்குமா?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...


0 comments:
Post a Comment