Sunday, September 21, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலையில் களிமேடு பகுதியில் தனியார் இடத்தில் வாடகைக் கட்டிடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் தற்போது இயங்கி வருகிறது. இந்த குறையை போக்க சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பல லட்சம் செலவு செய்து நவீன வசதிகளுடன் டி.எஸ்.பி. அலுவலகம் கட்டப்பட்டது.
ஆனால் இன்னும் திறப்பு விழா செய்யப்படவில்லை. தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு மக்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தின் அருகில் காங்கயம் போலீஸ் நிலையம், மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் காங்கயம் கோர்ட்டு வாளகம், காங்கயம் சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ளது. அதனால் மக்கள் தங்கள் குறைகளை போக்க வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
தனியார் இடத்தில் டி.எஸ்.பி அலுவலகம் இயங்குவதால் மாதா மாதம் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள புதிய அலுவலகத்தை திறப்பதன் மூலம் மாத வாடகை செலுத்த வேண்டியதில்லை. மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாகும். அரசு விரைவில் முடிவு எடுக்குமா?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment