Sunday, September 21, 2014
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மதியம் 12.30 மணியளவில் கோவை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மினி டோர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி டோர் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
பின்னர் அந்த லாரி கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய பின்னர் பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. அதன் பின்னர் அங்குள்ள கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 1 ஆண் மற்றும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசாரும், கிழக்கு போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காயமடைந்தவர்கள் அப்பநாயக்கன்பட்டி புதூரைச் சேர்ந்த முருகன் (வயது 65), அவரது மனைவி கலா மணி (52), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அம்சவேணி (35), பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது. மற்றொரு பெண் பெயர் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment