Sunday, September 21, 2014
கோவையை அடுத்த நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சதாசிவம் (வயது 48).
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. குடிப்பழக்கம் உள்ள முருகேசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவார்.
வழக்கம் போல போதையில் வந்த முருகேசன் தனது மனைவியுடன் சண்டை போட்டார். வாய்க்குவந்தபடி திட்டினார். பொறுமையிழந்த சசிகலா பக்கத்து வீட்டில் உள்ள பஞ்சாயத்து தலைவரிடம் ‘எனது கணவர் என்னிடம் சண்டைக்கு வருகிறார். அவரை தட்டிக்கேளுங்கள்’ என்றார்.
உடனே சதாசிவம் அங்கு வந்து முருகேசனை சத்தம் போட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘என்னை தட்டிக்கேட்க நீ யார்?’ என்று ஆவேசமாய் பேசிய முருகேசன் திடீரென்று பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்து துப்பினார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விரலை பறிகொடுத்த சதாசிவம் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முருகேசனை தேடி வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை தொழிலாளி கடித்து துப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment