Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by farook press in ,    
கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பைன் பியூச்சர் நிறுவனம். இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக விவேக், செந்தில்குமார், நித்யானந்தா ஆகியோர் இருந்தனர்.
கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர். முதலீட்டாளர்களின் புகாரையடுத்து பைன் பியூச்சர் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆர்.எஸ்.புரத்தில் பைன் பியூச்சருக்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இது குறித்தும் கோவை பொருளாராத குற்றப்பிரிவில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் விவேக் குறிப்பிட்ட வணிக வளாகத்துக்கு சென்று கடையின் வாடகையை தன்னிடம் தருமாறு அங்குள்ளவர்களிடம் கேட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது எப்படி உங்களிடம் வாடகை தரமுடியும். நாளை கோர்ட்டு எங்களிடம் வாடகை கேட்டால் என்ன செய்வது என்று கூறினர்.
வணிக வளாகம் எனக்கு சொந்தம். நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன். என்னிடம் தான் வாடகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து வணிக வளாகத்தில் வாடகைக்கு உள்ளவர்கள் கோவை பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

0 comments: