Sunday, September 21, 2014
கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பைன் பியூச்சர் நிறுவனம். இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக விவேக், செந்தில்குமார், நித்யானந்தா ஆகியோர் இருந்தனர்.
கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர். முதலீட்டாளர்களின் புகாரையடுத்து பைன் பியூச்சர் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆர்.எஸ்.புரத்தில் பைன் பியூச்சருக்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இது குறித்தும் கோவை பொருளாராத குற்றப்பிரிவில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் விவேக் குறிப்பிட்ட வணிக வளாகத்துக்கு சென்று கடையின் வாடகையை தன்னிடம் தருமாறு அங்குள்ளவர்களிடம் கேட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது எப்படி உங்களிடம் வாடகை தரமுடியும். நாளை கோர்ட்டு எங்களிடம் வாடகை கேட்டால் என்ன செய்வது என்று கூறினர்.
வணிக வளாகம் எனக்கு சொந்தம். நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன். என்னிடம் தான் வாடகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து வணிக வளாகத்தில் வாடகைக்கு உள்ளவர்கள் கோவை பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment