Sunday, September 21, 2014
கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பைன் பியூச்சர் நிறுவனம். இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக விவேக், செந்தில்குமார், நித்யானந்தா ஆகியோர் இருந்தனர்.
கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர். முதலீட்டாளர்களின் புகாரையடுத்து பைன் பியூச்சர் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆர்.எஸ்.புரத்தில் பைன் பியூச்சருக்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இது குறித்தும் கோவை பொருளாராத குற்றப்பிரிவில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் விவேக் குறிப்பிட்ட வணிக வளாகத்துக்கு சென்று கடையின் வாடகையை தன்னிடம் தருமாறு அங்குள்ளவர்களிடம் கேட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது எப்படி உங்களிடம் வாடகை தரமுடியும். நாளை கோர்ட்டு எங்களிடம் வாடகை கேட்டால் என்ன செய்வது என்று கூறினர்.
வணிக வளாகம் எனக்கு சொந்தம். நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன். என்னிடம் தான் வாடகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து வணிக வளாகத்தில் வாடகைக்கு உள்ளவர்கள் கோவை பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 

 
 
 
0 comments:
Post a Comment