Sunday, September 21, 2014
கோவை பீளமேட்டில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விமானங்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் கோவை விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கேட்பாராற்று ஒரு மர்ம பேக் நீண்ட நேரமாக உள்ளது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டு இருந்தால் அதனை செயல் இழக்க செய்யுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
உஷாரான போலீசார் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் மேப்ப நாயுடன் உடனடியாக சென்றனர். போனில் கிடைத்த தகவல்படி கார் நிறுத்துமிடத்தில் மர்ம பேக் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அது வெறும் காலி பேக் என்றும் பயணிகள் யாரோ தேவையில்லை என்று போட்டுச்சென்றிருக்கலாம் என்று தெரியவருகிறது. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment