Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by farook press in ,    
கோவை பீளமேட்டில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விமானங்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் கோவை விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கேட்பாராற்று ஒரு மர்ம பேக் நீண்ட நேரமாக உள்ளது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டு இருந்தால் அதனை செயல் இழக்க செய்யுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
உஷாரான போலீசார் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் மேப்ப நாயுடன் உடனடியாக சென்றனர். போனில் கிடைத்த தகவல்படி கார் நிறுத்துமிடத்தில் மர்ம பேக் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அது வெறும் காலி பேக் என்றும் பயணிகள் யாரோ தேவையில்லை என்று போட்டுச்சென்றிருக்கலாம் என்று தெரியவருகிறது. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments: