Sunday, September 21, 2014
கோவை பீளமேட்டில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விமானங்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் கோவை விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கேட்பாராற்று ஒரு மர்ம பேக் நீண்ட நேரமாக உள்ளது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டு இருந்தால் அதனை செயல் இழக்க செய்யுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
உஷாரான போலீசார் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் மேப்ப நாயுடன் உடனடியாக சென்றனர். போனில் கிடைத்த தகவல்படி கார் நிறுத்துமிடத்தில் மர்ம பேக் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அது வெறும் காலி பேக் என்றும் பயணிகள் யாரோ தேவையில்லை என்று போட்டுச்சென்றிருக்கலாம் என்று தெரியவருகிறது. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment