Thursday, September 25, 2014
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் வையாபுரி (வயது 70). இவரது மகன் கதிரவன் (வயது 35). இவரது மகள் சந்தியா (பெர் மாற்றப்பட்டுள்ளது). சந்தியா அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு சந்தியாவின் தாயார் தனலட்சுமி இறந்துவிட்டார்.
அவரது இறப்புக்கு பின்னர் சந்தியா மனமுடைந்த நிலையில் இருந்தார். ஆறுதலாக சந்தியா பள்ளிக்கு சென்று வந்தார். ஆனால் அவரது தாத்தா வையாபுரி மற்றும் தந்தை கதிரவன் 2 பேரும் சேர்ந்து சந்தியாவை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக வீட்டில் துணி துவைக்கவும், சமையல் செய்யவும் கூறி துன்புறுத்தி வந்தனர்.
சிறுமியான சந்தியா வால் அவர்களது தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனஉளைச் சலுக்கு ஆளானார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் பாபுவை தொடர்பு கொண்ட சிறுமி சந்தியா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் கணேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் சந்தியாவின் வீட்டில் ஆய்வு நடத்தி சந்தியாவின் தந்தை மற்றும் தாத்தாவை எச்சரித்து வந்தனர். மீண்டும் 2 நாட்கள் கழித்து ஆய்வுக்கு சென்ற போது தொடர்ந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கணேஷ் பாபு உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி சந்தியாவை கொடுமைப்படுத்தியதாக கதிரவன் மற்றும் வையாபுரி மீது புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகார் உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து கதிரவன் மற்றும் வையாபுரியை போலீசார் கைது செய்து உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment