Saturday, September 20, 2014
தொழிலாளர் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி
வாகனப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு முடிவு
திருப்பூர், செப்.20-
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சூழலில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய போனஸ் தொகையை அதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வலியுறுத்தி வாகனப் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் நடத்த இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனியன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, டி.குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்க இருப்பதால் பனியன், விசைத்தறி, சலவை, சுமைப்பணி, கட்டுமானம், இன்ஜினியரிங், கைத்தறி மற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் பண்டிகைக்கு 15 தினங்களுக்கு முன்பே உரிய போனஸ் தொகையை வழங்க வேண்டும் என அனைத்து தொழில் சார்ந்த முதலாளிகளையும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது.
அதேசமயம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட மையங்களில் அக்டோபர் 6ம் தேதி வாகனப் பிரச்சாரம் செய்வது என்றும், அக்டோபர் 7ம் தேதி திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் சிஐடியு முடிவு செய்துள்ளது.
போனஸ் என்பது தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமை என்பதால் அதை உரிய காலத்தில் கேட்டுப் பெற தொழிலாளர்கள் முன்வர வேண்டும். சிஐடியு நடத்தும் போனஸ் தொடர்பான ஆர்ப்பாட்ட இயக்கத்தில் அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment