Saturday, September 20, 2014
தொழிலாளர் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி
வாகனப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு முடிவு
திருப்பூர், செப்.20-
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சூழலில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய போனஸ் தொகையை அதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வலியுறுத்தி வாகனப் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் நடத்த இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனியன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, டி.குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்க இருப்பதால் பனியன், விசைத்தறி, சலவை, சுமைப்பணி, கட்டுமானம், இன்ஜினியரிங், கைத்தறி மற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் பண்டிகைக்கு 15 தினங்களுக்கு முன்பே உரிய போனஸ் தொகையை வழங்க வேண்டும் என அனைத்து தொழில் சார்ந்த முதலாளிகளையும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது.
அதேசமயம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட மையங்களில் அக்டோபர் 6ம் தேதி வாகனப் பிரச்சாரம் செய்வது என்றும், அக்டோபர் 7ம் தேதி திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி போனஸ் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் சிஐடியு முடிவு செய்துள்ளது.
போனஸ் என்பது தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமை என்பதால் அதை உரிய காலத்தில் கேட்டுப் பெற தொழிலாளர்கள் முன்வர வேண்டும். சிஐடியு நடத்தும் போனஸ் தொடர்பான ஆர்ப்பாட்ட இயக்கத்தில் அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment