Monday, September 29, 2014
திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளை காவல் துறை குற்றவாளிகளைப் போல் பாவிக்கக் கூடாது. இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அரசு நிர்வாகம் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று வடமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இங்கே தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்துத் தெரிவித்தனர். சீனிவாசன் இந்தியில் அவர்களிடம் சிஐடியு செயல்பாடு குறித்து விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சமமான கூலி வழங்க வேண்டும், கூலி வழங்குவதில் காலதாமதம் செய்வது, பாரபட்சம் காட்டுவது கூடாது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, தங்குமிட வசதி, மருத்துவ வசதி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை அனைத்து மாவட்டங்களிலும், திருப்பூர் மாவட்டத்திலும் முறையாக அமல்படுத்த வேண்டும். வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை காவல் துறையினர் பல்வேறு வகையிலும் துன்புறுத்துவது, சந்தேகக் கண்ணோடு பார்ப்பது என அணுகுமுறை உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்களை பாரபட்சமாகவோ, குற்றவாளிகளைப் போலோ காவல் துறை பார்க்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அனைவரையும் குற்றவாளிகளாக நினைக்கக் கூடாது. இந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஜனஸ்ரீ பீம யோஜனா காப்பீட்டுத் திட்டத்தில் இத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அக்டோபர் 5ம் தேதி மிகப்பெருமளவில் வடமாநிலத் தொழிலாளர்களைத் திரட்டி அவர்கள் கோரிக்கை குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
---------------
ஜெயலலிதாவுக்கு தண்டனை
தலித் விடுதலை இயக்கம் வரவேற்பு
திருப்பூர், செப்.27-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 4 ஆண்டு தண்டனை வழங்கியிருப்பது நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக தலித் விடுதலை இயக்க இணைப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா சனியன்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...


0 comments:
Post a Comment