Monday, September 29, 2014
திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளை காவல் துறை குற்றவாளிகளைப் போல் பாவிக்கக் கூடாது. இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அரசு நிர்வாகம் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று வடமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இங்கே தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்துத் தெரிவித்தனர். சீனிவாசன் இந்தியில் அவர்களிடம் சிஐடியு செயல்பாடு குறித்து விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சமமான கூலி வழங்க வேண்டும், கூலி வழங்குவதில் காலதாமதம் செய்வது, பாரபட்சம் காட்டுவது கூடாது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, தங்குமிட வசதி, மருத்துவ வசதி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை அனைத்து மாவட்டங்களிலும், திருப்பூர் மாவட்டத்திலும் முறையாக அமல்படுத்த வேண்டும். வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை காவல் துறையினர் பல்வேறு வகையிலும் துன்புறுத்துவது, சந்தேகக் கண்ணோடு பார்ப்பது என அணுகுமுறை உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்களை பாரபட்சமாகவோ, குற்றவாளிகளைப் போலோ காவல் துறை பார்க்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அனைவரையும் குற்றவாளிகளாக நினைக்கக் கூடாது. இந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஜனஸ்ரீ பீம யோஜனா காப்பீட்டுத் திட்டத்தில் இத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அக்டோபர் 5ம் தேதி மிகப்பெருமளவில் வடமாநிலத் தொழிலாளர்களைத் திரட்டி அவர்கள் கோரிக்கை குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
---------------
ஜெயலலிதாவுக்கு தண்டனை
தலித் விடுதலை இயக்கம் வரவேற்பு
திருப்பூர், செப்.27-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 4 ஆண்டு தண்டனை வழங்கியிருப்பது நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக தலித் விடுதலை இயக்க இணைப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா சனியன்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...


0 comments:
Post a Comment