Monday, September 29, 2014
திருப்பூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தவும், சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகளை தேவைக்கேற்ப வைத்திருக்கவும், லஞ்ச ஊழலைக் களையவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் ஆறுக்குட்டி தலைமை வகித்தார். இதில் ஏழை மக்களின் ஒரே ஆதாரமாகத் திகழும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக இம்மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பியும், அனைத்து மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடப்பட்டது
இத்துடன் திருப்பூர் மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்தும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர் போல் சித்திரித்து தலை மற்றும் உடலில் கட்டுப் போட்டு படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பலரும் தங்கள் தலையிலும், கைகள், உடலிலும் கட்டுப் போட்டுக் கொண்டு மருத்துவமனை சீர்கேட்டைக் களைய ஆவேச முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்பட பெருந்திரளான இளைஞர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக ஞானசேகரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment