Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by Unknown in ,    


உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
உடுமலை, காந்தி சவுக் பகுதியைச் சேர்ந்த தாவூத்கான் மகன் பஷீர் அகமது(36). ஆட்டோ ஓட்டுநரான இவர், திங்கள்கிழமை நண்பர்களுடன் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைப் பகுதிக்கு சென்றார். பின்னர் பஷீர் அகமது அங்குள்ள அமராவதி பிரதான கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் வாய்க்காலின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்று தண்ணீருக்குள் குதித்தபோது பஷீர் அகமது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பஷீர் அகமது உயிரிழந்தார். அமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: