Tuesday, September 30, 2014
திருப்பூர் மாவட்டம், மூலனூர் சர்வோதய சங்கத்தின் சார்பில், வடுகபட்டி சாலையில் காதி பவன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருப்பூர் தமிழ்நாடு சர்வோதய சங்கச் செயலாளர் ஏ.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மூலனூர் சர்வோதய சங்கச் செயலாளர் சி.ராமசாமி வரவேற்றார். திருப்பூர் சங்க பொருளாளர் எஸ்.ராஜு, மூலனூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் பி.பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோவை, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் ஆர்.கணேசன் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இதில், காதி பவனை திறந்து வைத்து கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குநர் டி.தனபால் பேசியது:
கதர் தொழில்களை மேம்படுத்த, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி அளித்து வருகிறது. இவற்றின் உற்பத்தி, விற்பனை, தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான ஒத்துழைப்பு மூலம் தற்போது இதற்காக ரூ. 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தமிழகத்தில் 5 கதர் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் 11 நிறுவனங்கள் இணைய உள்ளன. கதர் தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் தரமான பொருள்களை தனியாரைப் போல நவீன விற்பனையகங்கள் மூலம் விற்றால், அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும். கதர் கிராமத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது என்றார்.
மூலனூர் சங்கத் தலைவர் கே.ஈஸ்வரன், பொருளாளர் கே.பாண்டித்துரை, கிளை மேலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி கே.லிங்கசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment