Saturday, September 13, 2014

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணி அளவில் பசுமலை பராக்கா நகர் பகுதியில் தண்டவாளத்தை அந்த ரெயில் கடக்கும்போது திடீரென ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது. ஆனாலும் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை ஓட்டி திருப்பரங்குன்றத்தில் நிறுத்தினார்.
அங்கு ரெயில்வே அதிகாரியிடம், பசுமலை பராக்கா நகர் பகுதியில் ரெயில் வரும்போது ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது என்னவென்று தெரியவில்லை. பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு புறப்பட்டார்.
ரெயில்வே அதிகாரி உடனே மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பகுதி தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்தன. அதனை அப்புறப்படுத்தி விசாரணையை தொடங்கினர்.
ரெயிலை கவிழ்க்கும் சதி நோக்கத்தில் இந்த மாதிரி இரும்பு கம்பிகளை தண்டவாளத்தில் யாரும் போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பசுமலை பகுதியில் நடந்து வரும் கட்டிடப் பணிக்கு பயன் படுத்தப்பட்ட கம்பிகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் செல்லும்போது தண்டவாளத்தில் சிதற விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
இரும்பு கம்பிகளை திருடிய ஆசாமிகள் யார்? தண்டவாளத்தில் தானாக அவைகள் விழுந்ததா? அல்லது வேண்டுமென்றே போட்டுச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment