Saturday, September 13, 2014

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணி அளவில் பசுமலை பராக்கா நகர் பகுதியில் தண்டவாளத்தை அந்த ரெயில் கடக்கும்போது திடீரென ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது. ஆனாலும் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை ஓட்டி திருப்பரங்குன்றத்தில் நிறுத்தினார்.
அங்கு ரெயில்வே அதிகாரியிடம், பசுமலை பராக்கா நகர் பகுதியில் ரெயில் வரும்போது ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது என்னவென்று தெரியவில்லை. பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு புறப்பட்டார்.
ரெயில்வே அதிகாரி உடனே மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பகுதி தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்தன. அதனை அப்புறப்படுத்தி விசாரணையை தொடங்கினர்.
ரெயிலை கவிழ்க்கும் சதி நோக்கத்தில் இந்த மாதிரி இரும்பு கம்பிகளை தண்டவாளத்தில் யாரும் போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பசுமலை பகுதியில் நடந்து வரும் கட்டிடப் பணிக்கு பயன் படுத்தப்பட்ட கம்பிகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் செல்லும்போது தண்டவாளத்தில் சிதற விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
இரும்பு கம்பிகளை திருடிய ஆசாமிகள் யார்? தண்டவாளத்தில் தானாக அவைகள் விழுந்ததா? அல்லது வேண்டுமென்றே போட்டுச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment