Wednesday, September 03, 2014
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் சொத்துக் குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள கூட்டுச் சதி, ஊன்றுகோல் உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்ததாகவும், அதன் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பணிந்திரா, முன்னதாக வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்ட போது கர்நாடக மாநில சட்டத்துறை செயலாளராக தான் இருந்ததாகவும், வழக்கின் பல கோப்புக்களை தான் கையாண்டு இருப்பதால் வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார். மேலும் மனு மீதான விசாரனையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment