Wednesday, September 03, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு, ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசே ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை அளித்துவிட்டு, மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவது ஏன் என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள கருணாநிதி, இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த நிலையில், பலர் வேலை கிடைக்காத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பிரச்னைகளிலும் அலட்சியம் காட்டுவதுபோல் இல்லாமல், ஆசிரியர் பிரச்னை தலையானது என்பதை மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment