Wednesday, September 03, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு, ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசே ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை அளித்துவிட்டு, மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவது ஏன் என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள கருணாநிதி, இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த நிலையில், பலர் வேலை கிடைக்காத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பிரச்னைகளிலும் அலட்சியம் காட்டுவதுபோல் இல்லாமல், ஆசிரியர் பிரச்னை தலையானது என்பதை மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment