Wednesday, September 03, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு, ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசே ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை அளித்துவிட்டு, மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவது ஏன் என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள கருணாநிதி, இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த நிலையில், பலர் வேலை கிடைக்காத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பிரச்னைகளிலும் அலட்சியம் காட்டுவதுபோல் இல்லாமல், ஆசிரியர் பிரச்னை தலையானது என்பதை மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
.jpg)
0 comments:
Post a Comment