Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in ,    


பாலியல் பலாத்காரம்... கொலை... கொள்ளை... பதற வைக்கும் மதுரை!தமிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய்  இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால்,  மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் க்ரைம் ரேட் ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது.   கடந்த எட்டு மாதங்களில் நடந்துள்ள கொலை சம்பவங்கள் 46, கற்பழிப்பு சம்பவங்கள் 23, கொள்ளை சம்பவங்கள் 81, பாலியல் துன்புறுத்தல்கள் 9, கூட்டு கொள்ளைகள் 4, சாதாரண க்ரைம் சம்பவங்கள் 32 என்று க்ரைம் பட்டியலை வாசிக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்! இவற்றில், பழிக்குப் பழி கொலை,  சொத்துத் தகராறு, குடிபோதை தகராறில் கொலை, கள்ளக்காதல் கொலை, உணர்ச்சிவசப்படுவதன் மூலம் நடக்கும் கொலை என்றெல்லாம் போலீஸ் பிரித்து கணக்குக் காட்டுவதைப்போல், சாதாரண பொது ஜனத்துக்குப் பார்க்கத் தெரியவில்லை. ஆதாயக் கொலை, ரவுடிகள், கூலிப்படையை ஏவி கொலை செய்தல் என்கிற பேனர்களில் நடந்த எல்லாக் கொலைகளையும் சேர்த்தே கணக்குப்போடுகிறார்கள்

0 comments: