Monday, September 29, 2014
சென்னை, செப். 29–
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.
இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார்.
அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.
இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார்.
அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment