Friday, September 26, 2014
ருப்பூர், செப்.26-
திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குத் தேவையான உள்கட்டமைப்பு, மருத்துவர்கள் வசதி கோரியும்,இங்குள்ள சீர்கேடுகளை களைய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
19 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும்,நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற வாய்ப்புள்ளது மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையே.ஆனால் இங்கு தேவையான படுக்கை வசதிகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்குத் தேவையான உபகரண வசதி இல்லை.முழு நேர மருந்தகம், ரத்த வங்கி பணியாளர் இல்லை, விபத்துக் காயம், தலைக்காய சிகிச்சை வசதி இல்லை. பிணவறையில் போதிய வசதி இல்லை. இது போதாதென்று மகப்பேறு பிரிவு உள்பட அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் கையூட்டுப் பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அரசு தலைமை மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும், முறைகேடு,லஞ்சத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக உயர்த்தக் கோரியும் சனியன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment