Friday, September 26, 2014
ருப்பூர், செப்.26-
திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குத் தேவையான உள்கட்டமைப்பு, மருத்துவர்கள் வசதி கோரியும்,இங்குள்ள சீர்கேடுகளை களைய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
19 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும்,நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற வாய்ப்புள்ளது மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையே.ஆனால் இங்கு தேவையான படுக்கை வசதிகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்குத் தேவையான உபகரண வசதி இல்லை.முழு நேர மருந்தகம், ரத்த வங்கி பணியாளர் இல்லை, விபத்துக் காயம், தலைக்காய சிகிச்சை வசதி இல்லை. பிணவறையில் போதிய வசதி இல்லை. இது போதாதென்று மகப்பேறு பிரிவு உள்பட அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் கையூட்டுப் பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அரசு தலைமை மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும், முறைகேடு,லஞ்சத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக உயர்த்தக் கோரியும் சனியன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment