Friday, September 26, 2014

On Friday, September 26, 2014 by farook press in ,    
ருப்பூர்செப்.26-
ிருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குத் தேவையான உள்கட்டமைப்புமருத்துவர்கள் வசதி கோரியும்,இங்குள்ள சீர்கேடுகளை களைய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
19 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் ஏழைஎளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும்,நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற வாய்ப்புள்ளது மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையே.ஆனால் இங்கு தேவையான படுக்கை வசதிகள்போதுமான மருத்துவர்கள்செவிலியர்கள்ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்குத் தேவையான உபகரண வசதி இல்லை.முழு நேர மருந்தகம்ரத்த வங்கி பணியாளர் இல்லைவிபத்துக் காயம்தலைக்காய சிகிச்சை வசதி இல்லைபிணவறையில் போதிய வசதி இல்லைஇது போதாதென்று மகப்பேறு பிரிவு உள்பட அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் கையூட்டுப் பெறுவது வாடிக்கையாகிவிட்டதுஇதனால் ஏழைஎளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் அரசு தலைமை மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்முறைகேடு,லஞ்சத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும்மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக உயர்த்தக் கோரியும் சனியன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி கூறியுள்ளார்.

0 comments: