Wednesday, September 10, 2014

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது அமராவதி. இங்குள்ள பொதுமக்கள்
இன்று அதிகாலை தங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சாலையின் குறுக்கே
அங்கும் இங்குமாக உலா வருவதைப் பார்த்தனர்.
வெலவெலத்துப்போன அவர்கள் வீட்டுக்குள் போய் முடங்கினர். பின்னர் அமராவதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறு நிமிடமே வனரேஞ்சர் மாரியப்பன் மற்றும் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறிய பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.
பொதுமக்களை மிரள வைத்த சிறுத்தைப்புலி சிக்கவில்லை. அமராவதி நகர் குடியிருப்பை சுற்றி ஏராளமான புதர்கள் உள்ளன. அதில்தான் அந்த சிறுத்தைப்புலி பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக் கிறார்கள்.
சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி பகுதியில் தான் ராணுவத்தினர் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரும் தனியே வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலி பிடி பட்டால்தான் தங்களுக்கு நிம்மதி என்று அமராவதி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெலவெலத்துப்போன அவர்கள் வீட்டுக்குள் போய் முடங்கினர். பின்னர் அமராவதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறு நிமிடமே வனரேஞ்சர் மாரியப்பன் மற்றும் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறிய பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.
பொதுமக்களை மிரள வைத்த சிறுத்தைப்புலி சிக்கவில்லை. அமராவதி நகர் குடியிருப்பை சுற்றி ஏராளமான புதர்கள் உள்ளன. அதில்தான் அந்த சிறுத்தைப்புலி பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக் கிறார்கள்.
சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி பகுதியில் தான் ராணுவத்தினர் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரும் தனியே வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலி பிடி பட்டால்தான் தங்களுக்கு நிம்மதி என்று அமராவதி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment