Friday, September 26, 2014
நரேந்திர மோடி குறித்து உ.வாசுகி கிண்டல்
திருப்பூர், செப்.26-
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மனோகரா திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல நீண்ட வசனத்தைப் பேசிக் கொண்டிருந்த நரேந்திர மோடி, பிரதமர் ஆன பிறகு எந்த முக்கியப் பிரச்சனையிலும் வாய் திறந்து பேசாமல், மன்மோகன் சிங் போல,மௌன சாமியார் ஆகிவிட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய உ.வாசுகி கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு 370சிறப்பு அந்தஸ்து இருப்பது போல குஜராத், மகாராஷ்டிராவின் சில பிரதேசங்களுக்கும் 371 பிரிவு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. 371 ஏ முதல் ஐ வரை நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், ஆந்திரா,சிக்கிம், மிஜோராம், அருணாசலபிரதேசம், கோவாவுக்கும் சில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி முதல்வராக இருந்த குஜராத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது பற்றி அவரோ அவர் கட்சியோ வாய் திறந்தார்களா? காஷ்மீர் பிரச்சனையில் மட்டும் இவர்கள் 370 பிரிவை நீக்க வேண்டும் எனப் பேசுவதில் சிறுபான்மை மத எதிர்ப்பு அரசியல் செய்கின்றனர்.
இந்த அரசியல் சட்ட பிரிவு சேர்க்கப்பட்டபோது நேரு அமைச்சரவையில் சியாமா பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்து அவரும் இதை ஏற்றுக் கொண்டார். சில காலம் கழித்து அவரே 370பிரிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இடையில் என்ன நடந்தது? காஷ்மீர் முதலமைச்சராக இருந்த ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தினார்.நிலக்கிழார்களுக்கு ஒரு பைசா கூட இழப்பீடு தராமல் நிலச்சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டது. அப்போது நிலத்தை இழந்த நிலக்கிழார்கள் இந்துக்களாக இருந்தனர். நிலம் பெற்ற ஏழை விவசாயிகள் இஸ்லாமியர்களாக இருந்தனர். காஷ்மீரில் நிலம் இழந்த நிலப்பிரபு வர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் சியாமா பிரசாத் முகர்ஜி பேசினார். உள்ளே இருந்த வர்க்கப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மதரீதியான பிரச்சனையாக, 370 பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளைப் பார்த்து முன்வைக்கப்படும் கேள்வி, "இந்தியாவில் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? மக்கள் உங்களை நிராகரித்து விட்டார்கள்"என்கின்றனர். அரசியல் என்பது எம்.எல்ஏ., எம்.பி. வெற்றி பெறுவது மட்டுமல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான போராட்டத்தில், பெண்கள், மாணவர்கள்,இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னே நிற்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக மனோகரா திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் போல் நீண்ட வசனம் பேசிக் கொண்டிருந்த மோடி,பிரதமர் ஆனபிறகு, மன்மோகன் சிங் போல மௌன சாமியாராகிவிட்டார். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தின் மூலம் மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளைத்தான் பாஜக அமல்படுத்துகிறது. இது ஐ.மு.கூட்டணி 3ன் ஆட்சி என்று காங்கிரஸ் காரர்களே சொல்கிறார்கள். இடதுசாரிகள் சொல்வதும் அதுவேதான்.பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசும், பாஜகவும் ஒரே கொள்கையைத்தான் அமல்படுத்துகிறார்கள். இவர்களுக்கு வித்தியாசம் கிடையாது. இவர்களது பொருளாதாரக் கொள்கை நாட்டுக்கு நல்லதல்ல.
கல்வியில் காவிமயம், பொருளாதாரத்தில் கார்ப்பரேட் மயம் என பாஜக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் வாய் திறந்து பேசக்கூடியவராக தமிழகத்தை ஆளும் முதல்வர் ஜெயலலிதா இல்லை. இந்த நிலையில் மக்களைத் திரட்டும் வேலையில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு உ.வாசுகி பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment