Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : திருநின்றவூர் அருகே கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர், பாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அம்சா (38), கட்டிட தொழிலாளி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அம்சாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன் தங்கராஜ் பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே, அதே பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஏழுமலை (43) என்பவருடன் அம்சாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். ஏழுமலைக்கு ஏற்கனவே திருமணமாகி அனுராதா (36) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு, அம்சாவுக்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அம்சா தனது மகள்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ஏழுமலை அம்சாவை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தவுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அம்சாவின் உடலில் ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து ஏழுமலை தப்பியோடி விட்டார்.
அம்சாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடல் முழுவதும் கருகிய நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அம்சா இறந்தார்.
புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: