Monday, September 15, 2014
சென்னை, : திருநின்றவூர் அருகே கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர், பாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அம்சா (38), கட்டிட தொழிலாளி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அம்சாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன் தங்கராஜ் பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே, அதே பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஏழுமலை (43) என்பவருடன் அம்சாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். ஏழுமலைக்கு ஏற்கனவே திருமணமாகி அனுராதா (36) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு, அம்சாவுக்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அம்சா தனது மகள்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ஏழுமலை அம்சாவை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தவுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அம்சாவின் உடலில் ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து ஏழுமலை தப்பியோடி விட்டார்.
அம்சாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடல் முழுவதும் கருகிய நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அம்சா இறந்தார்.
புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர், பாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அம்சா (38), கட்டிட தொழிலாளி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அம்சாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன் தங்கராஜ் பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே, அதே பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் ஏழுமலை (43) என்பவருடன் அம்சாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். ஏழுமலைக்கு ஏற்கனவே திருமணமாகி அனுராதா (36) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு, அம்சாவுக்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அம்சா தனது மகள்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ஏழுமலை அம்சாவை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தவுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அம்சாவின் உடலில் ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து ஏழுமலை தப்பியோடி விட்டார்.
அம்சாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடல் முழுவதும் கருகிய நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அம்சா இறந்தார்.
புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஏழுமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
0 comments:
Post a Comment