Wednesday, September 17, 2014
சென்னை ECRல் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் பாஸ்கர் ஓர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவரை கேட்டபோது, எங்கள் மாநகரகாவல் ஆணையர் முதியோர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும், உதவியும் காவல்துறை உறுதிசெய்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில், கூடுதல்ஆணையர்,இணைஆணையர்,(தெற்க்குமண்டலம்)வழிகாட்டுதலின் படி, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதில் சுமார் 80களுக்கு மேற்ப்பட்ட முதியோர்கள் தனிமையில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு துணையாக இருப்பவர்களும் சற்று முதியவர்களே.அதனால் சேவை மனப்பான்மையோடு ஓர் திட்டம் வகுக்கப்பட்டது. காவல்நிலையத்தில் தனியாக ஓர் தொலைபேசி (9498100174) அமைக்கப்பட்டுள்ளது, அதனுடைய எண்ணை தனிமையில் உள்ள முதியோரின் செல்போனில் speed முறையில் எண் 2ல் பதிவு செய்து தந்துவிடுவோம்.எண் 2ஐ அழுத்திப்பிடித்தாலே, எங்களுக்கு அழைப்பு வரும், சம்பந்தப்பட்டவர்களின் பெயரும் தெரிந்துவிடும். பிறகு உடனடியாக அவர்களுக்கு அவசர உதவிகள் செய்துதரப்படும்.இதன்மூலம் நாங்கள் தனிமையில் இல்லை. உடனடி உதவிசெய்ய, உறவுகளாய் காவலர்கள் உள்ளனர் என்ற மனநிம்மதி இருக்கும். இது முதியோர்களுக்கும்,எங்களுக்கும் ஓர் நல்லுறவு ஏற்படுத்தும் திட்டம் என ஆய்வாளர் பாஸ்கர் கூறினார்.
ஆய்வாளரின் திட்டத்தை வரவேற்று,நிலையகாவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை இன்று மாலை துணை ஆணையர் கண்ணன் அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...




0 comments:
Post a Comment