Wednesday, September 17, 2014
சென்னை ECRல் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் பாஸ்கர் ஓர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவரை கேட்டபோது, எங்கள் மாநகரகாவல் ஆணையர் முதியோர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும், உதவியும் காவல்துறை உறுதிசெய்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில், கூடுதல்ஆணையர்,இணைஆணையர்,(தெற்க்குமண்டலம்)வழிகாட்டுதலின் படி, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதில் சுமார் 80களுக்கு மேற்ப்பட்ட முதியோர்கள் தனிமையில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு துணையாக இருப்பவர்களும் சற்று முதியவர்களே.அதனால் சேவை மனப்பான்மையோடு ஓர் திட்டம் வகுக்கப்பட்டது. காவல்நிலையத்தில் தனியாக ஓர் தொலைபேசி (9498100174) அமைக்கப்பட்டுள்ளது, அதனுடைய எண்ணை தனிமையில் உள்ள முதியோரின் செல்போனில் speed முறையில் எண் 2ல் பதிவு செய்து தந்துவிடுவோம்.எண் 2ஐ அழுத்திப்பிடித்தாலே, எங்களுக்கு அழைப்பு வரும், சம்பந்தப்பட்டவர்களின் பெயரும் தெரிந்துவிடும். பிறகு உடனடியாக அவர்களுக்கு அவசர உதவிகள் செய்துதரப்படும்.இதன்மூலம் நாங்கள் தனிமையில் இல்லை. உடனடி உதவிசெய்ய, உறவுகளாய் காவலர்கள் உள்ளனர் என்ற மனநிம்மதி இருக்கும். இது முதியோர்களுக்கும்,எங்களுக்கும் ஓர் நல்லுறவு ஏற்படுத்தும் திட்டம் என ஆய்வாளர் பாஸ்கர் கூறினார்.
ஆய்வாளரின் திட்டத்தை வரவேற்று,நிலையகாவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை இன்று மாலை துணை ஆணையர் கண்ணன் அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment