Wednesday, September 17, 2014
சென்னை ECRல் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் பாஸ்கர் ஓர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவரை கேட்டபோது, எங்கள் மாநகரகாவல் ஆணையர் முதியோர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும், உதவியும் காவல்துறை உறுதிசெய்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில், கூடுதல்ஆணையர்,இணைஆணையர்,(தெற்க்குமண்டலம்)வழிகாட்டுதலின் படி, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதில் சுமார் 80களுக்கு மேற்ப்பட்ட முதியோர்கள் தனிமையில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு துணையாக இருப்பவர்களும் சற்று முதியவர்களே.அதனால் சேவை மனப்பான்மையோடு ஓர் திட்டம் வகுக்கப்பட்டது. காவல்நிலையத்தில் தனியாக ஓர் தொலைபேசி (9498100174) அமைக்கப்பட்டுள்ளது, அதனுடைய எண்ணை தனிமையில் உள்ள முதியோரின் செல்போனில் speed முறையில் எண் 2ல் பதிவு செய்து தந்துவிடுவோம்.எண் 2ஐ அழுத்திப்பிடித்தாலே, எங்களுக்கு அழைப்பு வரும், சம்பந்தப்பட்டவர்களின் பெயரும் தெரிந்துவிடும். பிறகு உடனடியாக அவர்களுக்கு அவசர உதவிகள் செய்துதரப்படும்.இதன்மூலம் நாங்கள் தனிமையில் இல்லை. உடனடி உதவிசெய்ய, உறவுகளாய் காவலர்கள் உள்ளனர் என்ற மனநிம்மதி இருக்கும். இது முதியோர்களுக்கும்,எங்களுக்கும் ஓர் நல்லுறவு ஏற்படுத்தும் திட்டம் என ஆய்வாளர் பாஸ்கர் கூறினார்.
ஆய்வாளரின் திட்டத்தை வரவேற்று,நிலையகாவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை இன்று மாலை துணை ஆணையர் கண்ணன் அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று எழுதப்பட்டிருந்தது . ஜெ.ஜோசப் .மாவட்ட செயலாளர் ...
0 comments:
Post a Comment