Wednesday, September 17, 2014
சென்னை ECRல் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் பாஸ்கர் ஓர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவரை கேட்டபோது, எங்கள் மாநகரகாவல் ஆணையர் முதியோர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும், உதவியும் காவல்துறை உறுதிசெய்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில், கூடுதல்ஆணையர்,இணைஆணையர்,(தெற்க்குமண்டலம்)வழிகாட்டுதலின் படி, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதில் சுமார் 80களுக்கு மேற்ப்பட்ட முதியோர்கள் தனிமையில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு துணையாக இருப்பவர்களும் சற்று முதியவர்களே.அதனால் சேவை மனப்பான்மையோடு ஓர் திட்டம் வகுக்கப்பட்டது. காவல்நிலையத்தில் தனியாக ஓர் தொலைபேசி (9498100174) அமைக்கப்பட்டுள்ளது, அதனுடைய எண்ணை தனிமையில் உள்ள முதியோரின் செல்போனில் speed முறையில் எண் 2ல் பதிவு செய்து தந்துவிடுவோம்.எண் 2ஐ அழுத்திப்பிடித்தாலே, எங்களுக்கு அழைப்பு வரும், சம்பந்தப்பட்டவர்களின் பெயரும் தெரிந்துவிடும். பிறகு உடனடியாக அவர்களுக்கு அவசர உதவிகள் செய்துதரப்படும்.இதன்மூலம் நாங்கள் தனிமையில் இல்லை. உடனடி உதவிசெய்ய, உறவுகளாய் காவலர்கள் உள்ளனர் என்ற மனநிம்மதி இருக்கும். இது முதியோர்களுக்கும்,எங்களுக்கும் ஓர் நல்லுறவு ஏற்படுத்தும் திட்டம் என ஆய்வாளர் பாஸ்கர் கூறினார்.
ஆய்வாளரின் திட்டத்தை வரவேற்று,நிலையகாவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை இன்று மாலை துணை ஆணையர் கண்ணன் அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...




0 comments:
Post a Comment