Tuesday, September 16, 2014
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு ராணுவ வீரர் ஆடை உற்பத்திக்கான, வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது.
மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள திருப்பூர் பின்னலாடை துறைக்கு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. பல்வேறு காரணங்களால், சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகள், ஆடை உற்பத்தியை குறைத்துள்ளன. இது, திருப்பூரின் ஆடை ஏற்றுமதிக்கு சாதகமாகியுள்ளது. கோடை, குளிர், இளவேனில் சீசன் கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர் மட்டுமின்றி, பிரசித்தி பெற்ற ஆர்டர்களும், திருப்பூர் நோக்கி வரத்துவங்கியுள்ளன. சமீபத்தில் நடந்த 'பிபா' உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு, ரசிகர்கள் அணிந்த ஆடை உற்பத்தி வாய்ப்பு, திருப்பூருக்கு கிடைத்தது. தற்போது, வெளிநாட்டு ராணுவ வீரர்கள் அணியும் உள்ளாடை உற்பத்திக்கான வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் துணி உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:ஆரம்ப காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கான, ஆடை உற்பத்திக்கு ஆர்டர் கிடைத்தது. தற்போது, இந்த ஆர்டர்களை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மின்வெட்டு, சாய ஆலை பிரச்னை என தொடர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டுள்ள தொழில் துறைக்கு, சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன.சீசன் கால ஆர்டர்களோடு, தற்போது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அணியும் ரவுண்ட் நெக் பனியன், ஜட்டி, வெண்மை நிற கை பனியன் உற்பத்தி செய்வதற்கான விசாரணை வரத்துவங்கியுள்ளது.
பருத்தி நுாலிழையில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆடை உற்பத்திக்கு, ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். நுால் விலை, டாலர் மதிப்பு சீராக உள்ளது. எனவே, இவ்வகை ஆர்டர்களை முழுமையாக பெற முடியும். விதிமுறைகளுக்கு உட்பட்டு, சாம்பிள் ஆடைகள் தயாரித்து, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் அனுப்பப்படுகிறது. இந்த ஆர்டர் வசமானால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும்.இவ்வாறு, கூறினார்.
மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள திருப்பூர் பின்னலாடை துறைக்கு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. பல்வேறு காரணங்களால், சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகள், ஆடை உற்பத்தியை குறைத்துள்ளன. இது, திருப்பூரின் ஆடை ஏற்றுமதிக்கு சாதகமாகியுள்ளது. கோடை, குளிர், இளவேனில் சீசன் கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர் மட்டுமின்றி, பிரசித்தி பெற்ற ஆர்டர்களும், திருப்பூர் நோக்கி வரத்துவங்கியுள்ளன. சமீபத்தில் நடந்த 'பிபா' உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு, ரசிகர்கள் அணிந்த ஆடை உற்பத்தி வாய்ப்பு, திருப்பூருக்கு கிடைத்தது. தற்போது, வெளிநாட்டு ராணுவ வீரர்கள் அணியும் உள்ளாடை உற்பத்திக்கான வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் துணி உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:ஆரம்ப காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கான, ஆடை உற்பத்திக்கு ஆர்டர் கிடைத்தது. தற்போது, இந்த ஆர்டர்களை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மின்வெட்டு, சாய ஆலை பிரச்னை என தொடர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டுள்ள தொழில் துறைக்கு, சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன.சீசன் கால ஆர்டர்களோடு, தற்போது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அணியும் ரவுண்ட் நெக் பனியன், ஜட்டி, வெண்மை நிற கை பனியன் உற்பத்தி செய்வதற்கான விசாரணை வரத்துவங்கியுள்ளது.
பருத்தி நுாலிழையில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆடை உற்பத்திக்கு, ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். நுால் விலை, டாலர் மதிப்பு சீராக உள்ளது. எனவே, இவ்வகை ஆர்டர்களை முழுமையாக பெற முடியும். விதிமுறைகளுக்கு உட்பட்டு, சாம்பிள் ஆடைகள் தயாரித்து, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் அனுப்பப்படுகிறது. இந்த ஆர்டர் வசமானால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும்.இவ்வாறு, கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment