Wednesday, September 24, 2014
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார்.
மதுரை ரயில் நிலைய பாதுகாப்பு வசதிகளை செவ்வாய்க்கிழமை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை செயல்பாட்டில் உள்ளது.
ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் பொருள்கள் கண்டறிய இது மிகவும் உதவும். ரயில்நிலையத்தின் பிரதான வாசலில் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக் கருவியும் பார்சல் பரிசோதனை கருவியும் உள்ளன. தற்போது மேலும் ஒரு பார்சல் ஸ்கேனர் கருவியும் மற்றும் வாகனங்களை அடியில் பரிசோதிக்கும் 2 கருவிகளும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இந்த கருவிகள் விரைவில் நிறுவப்படும். மேலும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்கவைக்கும் நவீன கருவிகளும் வழங்கப்பட உள்ளன என்றார்.
முன்னதாக அவர் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கருவிகள் செயல்படுவதை பார்வையிட்டார்.
ரயில் நிலையத்தில் மொத்தம் உள்ள 68 சிசிடிவி கேமிராக்களில் 4 காமிராக்கள் செயல்படாமல் உள்ளதை அவர் கண்டறிந்தார். அவற்றை உடனடியாக சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து
ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள ஒவ்வொரு வீரரையும் அழைத்து அவர்களது பணிகுறித்து கேட்டறிந்தார். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.
மதுரை ரயில் நிலைய பாதுகாப்பு வசதிகளை செவ்வாய்க்கிழமை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை செயல்பாட்டில் உள்ளது.
ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் பொருள்கள் கண்டறிய இது மிகவும் உதவும். ரயில்நிலையத்தின் பிரதான வாசலில் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக் கருவியும் பார்சல் பரிசோதனை கருவியும் உள்ளன. தற்போது மேலும் ஒரு பார்சல் ஸ்கேனர் கருவியும் மற்றும் வாகனங்களை அடியில் பரிசோதிக்கும் 2 கருவிகளும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இந்த கருவிகள் விரைவில் நிறுவப்படும். மேலும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்கவைக்கும் நவீன கருவிகளும் வழங்கப்பட உள்ளன என்றார்.
முன்னதாக அவர் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கருவிகள் செயல்படுவதை பார்வையிட்டார்.
ரயில் நிலையத்தில் மொத்தம் உள்ள 68 சிசிடிவி கேமிராக்களில் 4 காமிராக்கள் செயல்படாமல் உள்ளதை அவர் கண்டறிந்தார். அவற்றை உடனடியாக சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து
ரயில்வே பாதுகாப்பு படையில் உள்ள ஒவ்வொரு வீரரையும் அழைத்து அவர்களது பணிகுறித்து கேட்டறிந்தார். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அவர் பார்வையிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment