Sunday, September 21, 2014
இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா.வில் உரையாற்றுவதைக் கண்டித்து, திமுக வரும் 25 ஆம் தேதி நடத்தும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.
இது குறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மனித உரிமை மீறல் குற்றத்துக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே ஐ.நா.வில் செப்டம்பர் 25 ஆம் தேதி பேச உள்ளார். ஐ.நா.வில் அவர் உரையாற்றுவது, சர்வதேசப் புலனாய்வு விசாரணை நடத்துவதற்கு தடையாக இருக்கும்.
எனவே, ராஜபக்சே பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் செப்டம்பர் 25 ஆம் தேதியை தமிழர்கள் துக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
கருப்புச் சின்னங்கள் அணிவது, கருப்புக் கொடிகளை ஏற்றுவது போன்ற வகையில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் டெசோ அமைப்பின் தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போராட்ட அறிவிப்பை வரவேற்று ஆதரிப்பதுடன் கருப்புக் கொடி ஏற்றுவது, கருப்பு ஆடை அணிவது ஆகிய நடவடிக்கைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்“ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment