Sunday, September 21, 2014
இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா.வில் உரையாற்றுவதைக் கண்டித்து, திமுக வரும் 25 ஆம் தேதி நடத்தும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.
இது குறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மனித உரிமை மீறல் குற்றத்துக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே ஐ.நா.வில் செப்டம்பர் 25 ஆம் தேதி பேச உள்ளார். ஐ.நா.வில் அவர் உரையாற்றுவது, சர்வதேசப் புலனாய்வு விசாரணை நடத்துவதற்கு தடையாக இருக்கும்.
எனவே, ராஜபக்சே பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் செப்டம்பர் 25 ஆம் தேதியை தமிழர்கள் துக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
கருப்புச் சின்னங்கள் அணிவது, கருப்புக் கொடிகளை ஏற்றுவது போன்ற வகையில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் டெசோ அமைப்பின் தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போராட்ட அறிவிப்பை வரவேற்று ஆதரிப்பதுடன் கருப்புக் கொடி ஏற்றுவது, கருப்பு ஆடை அணிவது ஆகிய நடவடிக்கைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்“ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment