Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by Unknown in ,    


யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்திற்கு அருகில் மின்மாற்றி ஒன்றை நிறுவுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அதனையடுத்து அருகில் வேறு இடத்தில் நிலத்தைத் தோண்டியபோது, அங்கேயும் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து நான்கு இடங்களில், தோண்டிய இடங்களில் எல்லாம், மனித எலும்புகள் காணப்பட்டதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட காவல்துறையினர், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 comments: