Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றத்தை கல்லூரி தலைவர் கடோக் திறந்து வைத்தார்.
குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல் லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரி களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. ராணுவ கல்லூரியில் மனமகிழ் மன்றம் மற்றும் உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ராணுவ கல்லூரி தலைவர் கடோக் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். பின்னர் கடோக் உணவக அறைகள், மனமகிழ் மன்றத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள், ராணுவம் தொடர்பான ஓவியங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் முப்படை அதிகாரிகள் மத்தியில் கடோக் பேசியதாவது:-
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இங்கு நமது நாட்டின் நட்புறவு நாடுகளின் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இளம் அதிகாரிகளுக்கு பொழுதுபோக்குவதற்காக மனமகிழ் மன்றம் தொடங்கப் பட்டது.
நமது நாட்டை சேர்ந்த முப் படை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்கு அர்ப்பணம் செய் யும் வகையில் தங்களது கடமையை உணர்ந்து பணியை மேற்கொள்வது பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மனம் மகி ழும் வகை யில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முப்படை அதி காரிகள் கலந்து கொண் டனர். 

0 comments: