Thursday, September 04, 2014
கூடங்குளம் முதலாவது அணு உலையில் வணிகரீதியான மின் உற்பத்திக்கான அணுப்பிளவு தொடர்வினை புதன்கிழமை தொடங்கியது.
கூடங்குளத்தில், 1,000 மெகா வாட் மின்உற்பத்தி திறனுள்ள முதலாவது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் வணிகரீதியான மின் உற்பத்திக்கான ஆய்வு பணி கள் கடந்த ஜூலை 16-ம் தேதி தொடங்கியது. இதனால், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்க அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரிய ஒப்புதலுடன், 35 நாட்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகள் வெற்றிகரமாக முடிக்கப் பட்டு, வணிகரீதியில் மின்உற்பத் திக்கு முதலாவது அணுஉலை தயார் நிலையில் இருந்தது. ஆய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கை அணுசக்தி ஒழுங்க மைப்பு வாரியத்திடம் அளிக்கப் பட்டிருந்தது. கடந்த 31-ம் தேதி வணிகரீதியில் மின்உற்பத்திக்கு வாரியம் அனுமதி அளித்தது.
புதன்கிழமை அதிகாலை 5.35 மணியளவில் முதலாவது அணு உலையில், ‘கிரிட்டிக்காலிட்டி’ எனப்படும் அணுப்பிளவு தொடர் வினை தொடங்கியது. அதில் இருந்து 12 மணி நேரத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி எட்டப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment