Wednesday, September 24, 2014
மதுரை மாநகராட்சி பொறியாளரிடம் தன்னை உளவுத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி விசாரிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் பொறியாளராக இருப்பவர் மதுரம். இவரிடம் திங்கள்கிழமை குஜராத் மாநிலம், ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த லலித்போலோட்டியா (59) என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை ஐபி அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். மாநகராட்சிப் பொறியாளர் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று ஆணையர் கதிரவனிடமும் லலித்போலோட்டியா தன்னை அறிமுகத்தியுள்ளார். அவரது செயல்பாட்டில் சந்தேகமடைந்த மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தல்லாகுளம் போலீஸார் மாநகராட்சி அலுவலகம் வந்து லலித்போலோட்டியாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் லலித்போலோட்டியா, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் எனத் தெரியவந்தது. அதன்பின் அவரைக் கைது செய்ததாக போலீஸார் கூறினர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியிலும், அதைத் தொடர்ந்தும் அதிகாரிகள் சிலர் விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுகின்றன. இந்நிலையில் பொறியாளரையே மத்திய அதிகாரி என்ற பெயரில் விசாரணை நடத்த முயன்றிருப்பது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பொறியாளராக இருப்பவர் மதுரம். இவரிடம் திங்கள்கிழமை குஜராத் மாநிலம், ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த லலித்போலோட்டியா (59) என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை ஐபி அதிகாரி என அறிமுகம் செய்துள்ளார். மாநகராட்சிப் பொறியாளர் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று ஆணையர் கதிரவனிடமும் லலித்போலோட்டியா தன்னை அறிமுகத்தியுள்ளார். அவரது செயல்பாட்டில் சந்தேகமடைந்த மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் தல்லாகுளம் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தல்லாகுளம் போலீஸார் மாநகராட்சி அலுவலகம் வந்து லலித்போலோட்டியாவை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் லலித்போலோட்டியா, வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் எனத் தெரியவந்தது. அதன்பின் அவரைக் கைது செய்ததாக போலீஸார் கூறினர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியிலும், அதைத் தொடர்ந்தும் அதிகாரிகள் சிலர் விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுகின்றன. இந்நிலையில் பொறியாளரையே மத்திய அதிகாரி என்ற பெயரில் விசாரணை நடத்த முயன்றிருப்பது மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment