Tuesday, September 09, 2014
தமிழகம்
முழுவதும் உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி
நடக்கிறது. அதன்படி கோவை மாநகராட்சியில் காலியாகவுள்ள மேயர் பதவிக்கான
இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், மாநகராட்சி மேயர் தேர்தல் குறித்து
மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிக்
கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: தேர்தல் தொடர்பான பிரசார வாகன அனுமதி, வானொளி விளம்பர அனுமதி, கூட்டம் நடத்துவது குறித்த சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே, தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுப்பார்கள். மேலும் தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வெளியிடப்படுகிறது. அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் 2302323 என்ற தொலைபேசி எண்ணிலும், கலெக்டர் அலுவலகத்தில் 2300023 என்ற எண்ணில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மின்னணு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணியின்போது, அனைத்து கட்சி பிரதிநிதிகள் மூலம் நடத்தப்படும். இவ்வாறு அர்ச்சனாபட்நாயக் பேசினார்.
கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும், பிரசாரத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் உட்பட அதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment