Tuesday, September 09, 2014
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. அதன்படி கோவை மாநகராட்சியில் காலியாகவுள்ள மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், மாநகராட்சி மேயர் தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: தேர்தல் தொடர்பான பிரசார வாகன அனுமதி, வானொளி விளம்பர அனுமதி, கூட்டம் நடத்துவது குறித்த சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே, தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுப்பார்கள். மேலும் தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வெளியிடப்படுகிறது. அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் 2302323 என்ற தொலைபேசி எண்ணிலும், கலெக்டர் அலுவலகத்தில் 2300023 என்ற எண்ணில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மின்னணு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணியின்போது, அனைத்து கட்சி பிரதிநிதிகள் மூலம் நடத்தப்படும். இவ்வாறு அர்ச்சனாபட்நாயக் பேசினார்.
கூட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும், பிரசாரத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அர்ச்சனாபட்நாயக் விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் உட்பட அதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment